![]() 1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. 2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது. 3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது. 5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது. 6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது. 7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது. 8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது. 9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது. 10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது. 11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது. 12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது. # தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான். | ||||
செயலியின் பெயர் ஒன் டே. அதாவது ஒரு நாள். மாற்றத்துக்கான செயலி இந்த செயலி உங்களை ஒரு நாள் கொடை வள்ளலாக்கும் நோக்கம் கொண்டது. நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு நாளும் கொடை வள்ளலாக்க கூடியது.எப்படி தெரியுமா? இந்த செயலி தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பாலமாக உருவாக்கப்பட்டுள்ளது.உள்ளங்கையில் வந்து நிற்கு இந்த பாலம் வாயிலாக நீங்கள் உங்க்ளை உள்ளம் கவர்ந்த தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்கலாம். நன்கொடை என்றால் வாரி வழங்க வேண்டும் என்றில்லை. ஒரு டாலர் கொடுத்தாலும் போதுமானது.
இதற்காக தினமும் இந்த செயலி ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்தை அறிமுகம் செய்யும் .அதன் நோக்கம் உங்களை ஈர்த்தால் நீங்கள் ஒரு டாலர் நன்கொடை வழங்கலாம்.கூடுதலாகவும் வழங்கலாம்.
இப்படி ஒவ்வொருவரும் ஒரு டாலர் கொடுத்தால் குறிப்பிட்ட அந்த தொண்டு நிறுவனத்தின் நல்ல நோக்கம் எளிதாக நிறைவேற வாய்ப்பிருக்கிறது.இப்படி தினமும் ஒரு தொண்டு நிறுவனம் முன்னிறுத்தப்படும். தாராள மனம் கொண்டவர்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட தொண்டு நிறுவனங்களை பார்வையிட்டு அவற்றுக்கும் நன்கொடை தரலாம்.நண்பர்களுக்கு பரிந்துரைக்கலாம்.
பெரும்பாலானோர் கைகளில் செல் இருக்கிறது. பெரும்பாலான செல்லில் பல செயலிகள் இருக்கின்றன.அவை பல விதங்களில் பயன்படுகின்றன.இவற்றோடு இந்த ஒரு நாள் செயலியையும் சேர்த்து கொண்டால் நல்ல நோக்கத்தோடு செயல்படும் சேவை அமைப்புகளுக்கு கை கொடுத்தது போல இருக்கும்.
இவ்வுலகில் எல்லோரும் நல்லவரே. ஆனால் அவசர யுகத்தில் பலருக்கு நன்கொடை வழங்குவதற்கான வழியை தேர்வு செய்ய முடியவில்லை. நல்ல நம்பகமான நோக்கம் என உறுதியாக தெரிந்தால் எவரும் கையில் இருப்பதில் சிறு தொகையை தாராளமாக தருவார்கள். ஆனால் அதை தெரிந்து கொள்வது எப்படி?
இப்படி என்று வழிகாட்டுகிறது இந்த செயலி.
செல்லில் குறுஞ்செய்தி பார்க்கவும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் பார்க்கவும் செல்விடும் நேரத்திற்கு நடுவே இந்த செயலியையும் கவனித்தால் நன்கொடை தேவைப்படும் செயல்களை அறிந்து உதவலாம்.
அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலியை அதன் நோக்கம் மற்றும் தாக்கம் ஏர்படுத்தக்கூடிய அதன் ஆற்றலுக்காகவும் இங்கே அறிமுகம் செய்கிறேன். தவிர தேடியந்திர முதல்வனான கூகுல், பல தன்னாரவ செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அறிமுகமாகியுள்ள ஒரு நாள் செயலி வாழ்க.
செயலி முகவரி;http://www.google.com/onetoday/








குகைகளைக் குடைந்து உருவாக்கப்படும் கோவில்களுக்கு குடைவரைக்கோவில்கள் என்று பெயர். அஜந்தாவும் இந்த ரகம்தான். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.
கொண்டிருக்கும் வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக்குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டுகிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 76மீட்டர். இங்கு நடந்த பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்-கப்பட்டுள்ளன. பாறைகளில் மட்டுமல்ல, கூரைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் நம்மை ஓ போட வைத்துக்-கொண்டிருக்கின்றன.
வுதான் அஜந்தா. விமானப் பயணத்தைப் பொறுத்தவரை அவுரங்காபாத்தில் விமான-நிலையம் உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் இருந்து அவுரங்காபாத்திற்கு தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவுரங்காபாத்தில் இருந்து அஜந்தா 107 கி.மீ தொலைவில் உள்ளது. அஜந்தா குகைகளை இந்திய நேரப்படி காலை 9மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடலாம். கட்டணம் உண்டு. 

